கொரோனா வைரஸ் விவகாரம் - அரசியல் செய்ய வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள்
Apr 9 2020 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போவதாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்பின் விமர்சனத்திற்கு விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom, தயவுசெய்து கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப்பின் கருத்து உலக அளவில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆபத்தான வைரஸைத் தோற்கடிக்க நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்த Tedros, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் போன்ற ஒரு புதிய மற்றும் தீவிரமான நோயை எதிர்கொள்ளும்போது, உலக சுகாதார அமைப்பு, ஒரு நடவடிக்கைக்குப் பிறகு மதிப்பீடு செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண தாங்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், தொற்றுநோயிலிருந்து உயிரிழப்புகளை குறைப்பதை கற்றுக்கொள்ள உலக சுகாதார அமைப்பு விரும்புவதாகவும் Tedros Adhanom கூறினார்.