COVID-19 வைரசுக்கு எதிரான மனிதநேய போராட்டத்திற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் - அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோதி உறுதி
Apr 9 2020 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
COVID-19 வைரசுக்கு எதிரான மனிதநேய போராட்டத்திற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்யும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி, உறுதி அளித்துள்ளார்.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மனிதநேயத்திற்கு உதவி செய்துவரும் பிரதமர் திரு.நரேந்திர மோதிக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நன்றியை ஏற்றுக்கொண்டு பதில் அளித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோதி, COVID-19 வைரசுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு முன்பு இருந்ததைவிட வலிமையாக உள்ளதாகவும் பிரதமர் திரு. மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.