'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறித்து, ஐ.நா. இன்று முக்கிய ஆலோசனை - பிரதிநிதிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்து கேட்பு
Apr 9 2020 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகையே அச்சுறுத்தும் 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறித்து, ஐ.நா. சபையில், இன்று முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம், இன்று நடைபெறவுள்ளது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஐ.நா., பொதுச் செயலர் Antonio Guterres-ம் இதில் பங்கேற்கவுள்ளார். இதில், ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, கூட்டத்தின் முடிவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 1.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.