இயல்பு நிலை திரும்பிய வூஹான் நகரம் - 76 நாட்களுக்குப் பிறகு ரயில் மற்றும் விமான சேவைகள் தொடக்கம்
Apr 9 2020 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வுஹான் நகரில் 76 நாட்களுக்குப் பின்பு, ரயில் மற்றும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. பின்பு சீனா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த வுஹான் நகரம் முழுவதுமாக முடக்கப்பட்டது. சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 76 நாட்களுக்குப் பிறகு, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. வுஹான் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். ரயில்நிலைய ஊழியர்கள் பயணிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர்.