ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் விமானம் தாங்கிக்கப்பல் - கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள்
Apr 8 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் விமானம் தங்கிக் கப்பலில் கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக அக்கப்பல் நாடு திரும்பியது.
மேற்கு பசிபிக் கடலில் பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தது. அக்கப்பலில் பணியாற்றும் போர் வீரர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அக்கப்பலை உடனடியாக தாய்நாடு திரும்ப கடற்படை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து Charles de Gaulle பிரான்சை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்ற பின், அனைத்து கடற்படை வீரர்களுக்கும் உடல் நலம் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.