கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் நோய் அறிகுறிகள் - தென்கொரியாவில் கலக்கமடைந்த மருத்துவர்கள்
Apr 8 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நோயிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் அறிகுறிகள் தென்பட்டதால் தென்கொரியா மருத்துவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் சீனா பாதிக்கப்பட்ட ஓரிரு வாரங்களில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு சென்றது தென்கொரியா. தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்தல், அறிகுறி தென்பட்ட அதிகப்படியானோரை சோதனைக்கு உட்படுத்துதல், விரைவில் சோதனை முடிவை அறிதல், சமூக விலகலை கட்டாயமாக்குதல் போன்றவற்றால் கொரோனா பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்தியது. இதனால் பல்வேறு நாடுகளின் பாராட்டைபெற்றது தென்கொரியா. தென்கொரியாவில் தற்போது, 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தென்கொரியாவின் டாயிகு நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 51 பேர் குணடைந்து வீடுதிரும்பினர். அவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனையில், அனைவருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.