இந்தோனேசியாவில், கொரோனா உயிரிழப்பால் இரு மடங்கு அதிகரித்தது சவப்பெட்டிக்கான தேவை - தலைநகர் ஜெகார்த்தா உள்ளிட்ட இடங்களில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று
Apr 8 2020 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில், கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், சவப்பெட்டிக்கான தேவை இருமடங்கு அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில், இன்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 738 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 221 பேர் உயிரிழந்துள்ளனர். Jakarta, Bogor, Depok, Tangerang மற்றும் Bekasi ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சவப்பெட்டிகளுக்கான தேவை இருமடங்காக அதிகரித்துள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அதிகப்படியான சவப்பெட்டிகள் விற்கப்படுவதாகவும், கொரோனாவால் உயிரிழந்த ஏழைகளுக்கு எந்தவித கட்டணமும் இன்றி உதவுவதாகவும், சவப்பெட்டி தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.