வுகான் நகரில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட லைட் ஷோ - கொரோனா எதிர்ப்பு போரில் பணியாற்றி வீரர்கள் கெளரவிப்பு
Apr 8 2020 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில், கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் பணியாற்றிய வீரர்களை கெளரவிக்கும் வகையில், வுகான் நகரில் நடத்தப்பட்ட லைட் ஷோ, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரில், கிட்டத்தட்ட 11 வாரங்களுக்குப்பின், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றுவற்காக, சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், வுகான் நகருக்கு வந்திருந்தனர். அவர்களை கெளரவிக்கும் வகையில், வுகான் நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தன. யாங்சே ஆற்றைச் சுற்றியுள்ள கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும், வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றிய வீரர்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது.