பெரு நாட்டில் உள்ளூர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சந்தையில் குவிந்த மக்கள்
Apr 8 2020 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும், அங்குள்ள உணவுச்சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.
பெரு நாட்டில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள், பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே வர, அதிபர் மார்ட்டின் விஸ்காரா தடை விதித்துள்ளார். மேலும், வரும் 12-ம் தேதி, ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட இருப்பதால், தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக, லிமா நகரில் உள்ள உள்ளூர் சந்தையில், ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். முகக்கவசம் அணிந்தபடி சந்தைகளில் திரண்ட பொதுமக்கள், இறைச்சி உட்பட அத்தியாவசியப் பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.