சோதனைக்குத் தயார் நிலையில் 2 கொரோனா தடுப்பு மருந்துகள் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
Apr 8 2020 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயார் நிலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதையும் பீதி அடைய செய்துள்ள கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளையும், சிகிச்சை மருந்துகளையும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகளை, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக உலக சகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை எலிகளுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது மனிதர்களுக்கு சோதனை செய்ய தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.