ஜப்பானில் பல்கலைக் கழக விழாவில் புதிய அணுகுமுறை : ரோபோக்களைப் பயன்படுத்தி காணொலியில் பட்டமளிப்பு
Apr 8 2020 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில், பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கடைபிடிக்கப்பட்ட புதிய அணுகுமுறை, சிறந்ததொரு முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.
டோக்கியாவில் உள்ள Business Breakthrough பல்கலைக் கழகம், மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை, சமீபத்தில் நடத்தியது. இந்த பட்டமளிப்பு விழாவில், நியூமி என்ற ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாணவர்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில், இந்த ரோபோக்களின் முகத்தில் tablets பொருத்தப்பட்டு, காணொலி மூலம், பட்டம் வழங்கப்பட்டது. 4 மாணவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்பட்டதாக, பல்கலைக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உண்மையிலேயே ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக, பட்டம் பெற்ற மாணவர்கள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.