சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
Apr 8 2020 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோன வைரஸ் பற்றிய தகவல்களை மறைத்ததோடு, இவ்விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக, உலக சுகாதார நிறுவனத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலக சகாதார அமைப்புக்கு, அமெரிக்கா பெரிய அளவில் நிதிப் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மறைத்ததோடு, இவ்விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக, உலக சுகாதார நிறுவனம் மீது டொனால்டு ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க, பயண தடைகளை அமெரிக்கா விதித்தபோது, அதனை விமர்சித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா குறித்து நிறைய தகவல்கள் தெரிந்தும், அதனை தெரிவிக்காமல், பெரும் தவறை செய்துவிட்டதாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.