கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஐ.நா.வில் நாளை ஆலோசனை - உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க திட்டம்
Apr 8 2020 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில், காணொலி காட்சி மூலம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஐ.நா. பொதுச்செயலர் அண்டோனியோ கட்ரஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விஷயங்கள், பின்னர், அறிக்கையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.