ஈரானில் ராணுவத்தினருடன் இணைந்து முகக்கவசங்கள் தயாரிக்கும் தன்னார்வலர்கள் - பெண்கள் இணைந்து மேற்கொள்ளும் பணிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
Apr 6 2020 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரானில் ராணுவத்துக்கு உதவியாக தன்னார்வலர்கள் இணைந்து முகக்கவசம் தயாரிப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அங்கிருந்து தான் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ஈரானில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு கொரேனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெஹ்ரானில் அந்நாட்டு ராணுவத்தினர் சமூதாய கூடங்களையும் மருத்துவமனைகளாக மாற்றினர். இந்நிலையில், ரஹையான் நூர் என்ற தன்னார்வ அமைப்பு, பெண் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகளை கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. இந்த முகக்கவசங்கள் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்த அமைப்பின் பணிகளுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.