அமெரிக்க அரசின் உத்தரவை மீறி தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் - பல்வேறு நாடுகளில் பிரார்த்தனை நடைபெற்றதால் சர்ச்சை
Apr 6 2020 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை புறக்கணித்துவிட்டு லூசியானா மாநிலத்தில் ஏராளமான தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற பிரார்த்தனைக்கூட்டங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லூசியானா மாநிலத்தில் பேட்டன் ரோக் அருகே உள்ள Life Tabernacle தேவாலயத்தின் பாதிரியார் Tony Spell, கொரேனா வைரசைக் கண்டு யாரும் அஞ்சவேண்டாம் என்றும், பயம் ஒன்றுதான் தற்போதைய பாதகமாக சூழ்நிலை என்றும், வீடுகளில் அடைபட்டுக்கிடப்பது என்பது கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இறப்பதைவிடக் கொடுமையானது என்றும் தேவாலயப் பிரார்த்தனையின் போது போதித்தார். ஏற்கெனவே இது போன்ற செயல்களால் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதே போன்று ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.