இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று - தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரம்
Apr 6 2020 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து, இஸ்ரேல் நாட்டின் Bnei Brak என்ற பகுதி, தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில், கொரோனா பாதிப்பால் 46 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 18 பேர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, யூதர்கள் அதிகம் வசிக்கும் Bnei Brak பகுதியில் உள்ள 2 லட்சம் பேரில், 38 சதவீதத்தினர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதி, தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.