தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் வராததால் வெறிச்சோடிய யானைகள் பராமரிப்புப் பூங்கா - வருமானம் குறைந்ததால் யானைகள் பட்டினி கிடக்கும் அவலம்
Apr 6 2020 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் வராததால் Taweechai யானைகள் முகாமின் வருவாய் குறைந்து, பசியால் யானைகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மேற்கு மாகாணமாக காஞ்சனபுரியில் இந்த யானைகள் முகாம் உள்ளது. எப்போதும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இருப்பதால் நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் வருவாய் இன்றி, யானைகளைப் பட்டினி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வராததால், பூங்கா வெறிச்சோடிக் கிடந்தாலும், பாகன்களுக்கு விடுமுறை அளிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் இயலாத நிலையில், இந்த யானைகளுக்கு தொடர்ந்து உணவளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் யானைகள் இது போன்று சுற்றுலாப் பயணிகளை மட்டும் நம்பியிருக்கின்றன என்ற நிலையில், வரும் நாட்களில் இவைகளை எப்படிப் பராமரிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.