ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடரும் ஊரடங்கு - நகரமே வெறிச்சோடியதால் முடங்கியது இயல்பு வாழ்க்கை
Apr 6 2020 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.
மாஸ்கோவில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாரமாக அங்கு இந்த நிலை தொடருவதால், மாஸ்கோ நகரின் பெரும்பாலான பகுதிகள், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. நாடு முழுவதும், பல இடங்களில் ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்படுவதால், இதேநிலைதான் நீடிக்கிறது. ரஷ்யாவில், இதுவரை, 6 ஆயிரத்து 343 பேர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோவில் மட்டும் 591 பேர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.