தென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம்
Feb 28 2020 9:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்ததாக, தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் Daegu மற்றும் Cheongdo நகரில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 315 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் பரவலால், 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தென்கொரியாவுக்கு தடை விதித்துள்ளன. வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.