தீவிரவாதத்தை தாலாட்டி வளர்க்கிறது பாகிஸ்தான் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
Feb 28 2020 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிரவாதத்தை, பாகிஸ்தான், தாலாட்டி வளர்ப்பதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் 43-வது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியாவின் முதன்மைச் செயலர் திரு. Vimarsh Aryan, தீவிரவாதத்தால், காஷ்மீரில் கடும்மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறினார். கடந்த 7 மாதங்களாக காஷ்மீரில் ஜனநாயக ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொட்டில்கட்டி, தீவிரவாதத்தை, பாகிஸ்தான், தாலாட்டி வளர்ப்பதாகவும், உலக நாடுகள், அதனை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.