குள்ளமாக இருப்பதால் தற்கொலை செய்ய எண்ணிய சிறுவனுக்கு கிடைத்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கினான்
Feb 27 2020 8:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனக்கு கிடைத்த 34 கோடி ரூபாயை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக ஆஸ்திரேலிய சிறுவன் குவாடன் பேலஸ் அறிவித்துள்ளான்.
குள்ளமாக இருப்பதால், எல்லோரும் கிண்டல் செய்வதாக கூறி தன்னைக் கொன்றுவிடுமாறு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பேலஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சியை அவரின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின் குவாடன் பேலஸுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து உதவிகளும், நிதியும் குவியத் தொடங்கின. அவ்வாறு கிடைத்த 34 கோடி ரூபாயை தொண்டு நிறுவனத்துக்கு குவாடன் பேலஸ் வழங்கியுள்ளார்.