கொலம்பியாவில் பலத்த மழை காரணமாக மண்சரிவு : 5 பேர் உயிரிழப்பு - குழந்தை உள்ளிட்ட 4 பேர் மீட்பு
Feb 27 2020 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒரு குழந்தை உள்ளிட்ட நால்வர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கொலம்பியாவின் PIEDECUESTA நகருக்கு அருகே பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டது. பல மணிநேரம் பெய்த மழை காரணமாக மேன்கோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில பகுதிகளில் மழை நீர் குடியிருப்புக்களும் புகுந்தது. இதன் தொடர்ச்சியாக அதிகாலையில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் சிக்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புப் படையினர் கிராம மக்களின் உதவியுடன், ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு பேரை உயிருடன் மீட்டனர். ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.