இந்திய குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் நாடற்றவர்களாகும் அபாயம் : அமெரிக்க ஆணைய அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம்
Feb 21 2020 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை, இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை, நாடு அற்றவர்களாக மாற்றக் கூடும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை, இஸ்லாமிய சமூகத்தை மோசமாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கப்படுவதன் மூலம், இஸ்லாமியர்கள், நாடு இழந்தவர்கள் ஆவார்கள் என்றும், நாடு கடத்தலுக்கோ, நீண்ட நாட்கள் சிறைக்கோ உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வெளிவந்துள்ள இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.