பாகிஸ்தானை, தொடர்ந்து சாம்பல் நிறப் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் - சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு
Feb 21 2020 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானை, தொடர்ந்து சாம்பல் நிறப் பட்டியலில் வைத்திருக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற அந்த அமர்வின் கூட்டத்தில், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கை தொடர்பாக விதிக்கப்பட்ட 27 நிபந்தனைகளில் 14 நிபந்தனைகளை மட்டுமே பாகிஸ்தானால் நிறைவேற்ற முடிந்தததால், ஜூன் மாதம் வரை அந்நாட்டை சாம்பல் நிறப் பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. அதற்குள் நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றா விட்டால், எந்த ஒரு சர்வதேச நிதி உதவியையும் பெற முடியாத கருப்புப் பட்டியலுக்கு தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.