ஜப்பான் கடலில் கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'சொகுசு கப்பலில் இருவர் உயிரிழப்பு - வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 624-ஆக அதிகரிப்பு
Feb 20 2020 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானின் யோகோஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில், கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு காரணமாக, 2 ஜப்பானிய முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இது கப்பலில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பாகும். 624 பேருக்கு வைரஸ் தொற்று உள்ள நிலையில், 87 வயது முதியவரையும், 84 வயது மூதாட்டியையும், கொரோனா வைரஸ் பலிவாங்கியுள்ளது. 15 நாட்களாக துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் இருந்த பயணிகளில், 340 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் மீட்டுள்ளது. கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 700 பயணிகள் உள்ள நிலையில், சீனாவைத் தவிர்த்து, அதிக அளவில் நோய்த்தொற்று உள்ள இடமாக 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பல் மாறியுள்ளது.