கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் எதிரொலி - வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை அழிக்க சீன அரசு திட்டம்
Feb 19 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நோய் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை அழிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 4-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பரவுவதை தடுத்திட, சீன அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ அல்லது இருமினாலோ, அதிலிருந்து வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாக, கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் ஆகியவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை சுத்தம் செய்திட, சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து, வங்கிகளுக்கு வரும் கரன்சி நோட்டுகளை, அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து அழித்திட, உத்தரவிடப்பட்டுள்ளது.