அஃப்கனிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி 2-வது முறையாக தேர்வு : சுமார் 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Feb 19 2020 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கனிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அஃப்கனிஸ்தானில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்றது.
தாலிபான்களின் எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்ற இந்தத் தேர்தலில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக, அஷ்ரப் கானியை எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் தரப்பினர் குற்றம் சாட்டியதால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர், அதிபர் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றி பெற்றதாக, தேர்தல் ஆணையர் ஆலம் நூரிஸ்தானி அறிவித்தார். அதிபர் தேர்தலில் கானி 50 புள்ளி ஆறு, நான்கு சதவீத வாக்குகள் பெற்றிருப்பதாகவும் கூறினார்.