கோவிட் - 19 பாதிப்பின் தாயகமாக விளங்கும் வூஹானில் உள்ள மருத்துவமனை இயக்குநர் மரணம் - கொரோனா பாதிப்பால் பலியான பரிதாபம்
Feb 18 2020 8:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவிட்-19 வைரஸ் தாக்குதலின் காரணமாக வூஹானில் உள்ள மருத்துவமனையின் இயக்குநர் பலியாகியுள்ளார்.
சீனாவில் வூகான் நகரிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பினால், இதுவரை ஆயிரத்து 900 பேர் பலியாகியுள்ளனர். 72 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசிற்கு கோவிட்-19 என உலக சுகாதார சுகாதார மையம் பெயர் வைத்தது. வூஹானில் உள்ள வூசாங் மருத்துவமனையின் இயக்குநர் லியு சிமிங், கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மரணம் அடைந்தார். கடந்த வாரத்தில் மட்டும் மருத்துவத் துறையில் பணியாற்றும் 6 பேர், கோவிட் - 19 பாதிப்பினால் மரணம் அடைந்ததுள்ளனர். சீனாவில் இதுபோன்ற தொற்றுப் பரவக் கூடும் என்று முதன்முதலாக எச்சரித்த கண் மருத்துவ நிபுணர் லி வென்லியாங், வைரஸ் தொற்று ஏற்று உயிரிழந்த நிலையில், அவரது எச்சரிக்கையை பரிசீலிக்காததன் எதிரொலியாகவே இன்று மருத்துவமனை இயக்குநரை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இவ்விரு மருத்துவர்களின் மரணமும், முதலில் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பிறகு நீக்கப்பட்டு, மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.