ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்கு இடையே கிணற்றில் விழுந்த குதிரைகள் : பலமணிநேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு
Feb 18 2020 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்கு இடையே உள்ள கிணற்றில் விழுந்த நான்கு குதிரைகள் மீட்கப்பட்டது தொடர்பான காட்சிகள் வைரலாகியுள்ளன.
ரஷ்யாவின் உலு டெல்யாக் பகுதியில் விவசாயி ஒருவரின் நான்கு குதிரைகள் அங்கிருந்த கிணற்றில் விழுந்தன. பனிப்பாறைகளுக்கு இடையேயான கிணற்றிலிருந்து வெளியேற குதிரைகள் எவ்வளவோ முயன்ற போதும், அவற்றால் முடியவில்லை. இதையடுத்து, அவர் சக விவசாயிகளை அழைத்துக்கொண்டு அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். முதல் இரண்டு குதிரைகள் எளிதில் மீட்கப்பட்டாலும், மற்ற இரண்டும் டிராக்டரில் கயிற்றைக் கட்டி இழுத்து மீட்கப்பட்ன.