கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர் - சீன சுகாதாரத்துறை தகவல்

Feb 18 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து, நாள் ஒன்றுக்கு ஆயிரம் நோயாளிகள் வீதம் குணமடைந்து வீடு திரும்பி வருவதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் பத்தாயிரத்து 800 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளதாகவும், நேற்று ஒருநாளில் மட்டும், சுமார் ஆயிரத்து 500 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் குணமடைந்ததற்கு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்பு பெரியது என்றும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00