சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்ப அனுமதி
Feb 18 2020 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய பொதுமக்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிறிஸ்துமஸ் தீவில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்களுக்குப் பின்னர், அவர்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது, பலவித பரிசோதனைகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 14 நாட்கள் பொறுமையாக ஒத்துழைத்த அனைவருக்கும் பிரதமர் ஸ்காட் மோரிசன் நன்றி தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து திரும்பும் குடிமக்களை கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திப் பரிசோதிக்க அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.