பாகிஸ்தானில் விஷவாயு கசிந்ததில் 6 பேர் உயிரிழப்பு : 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி
Feb 18 2020 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் விஷவாயு கசிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இந்த சம்பவம் நேரிட்டது. காய்கறிகளைப் பதப்படுத்திவைத்திருக்கும் கப்பல் ஒன்றில் இருந்து விஷ வாயு கசிந்ததாகவும், காற்றில் வித்தியாசமான வாசனையை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வேறு பகுதிக்குச் சென்று விட்டதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், துறைமுக அதிகாரிகள் அப்படி ஒரு கப்பலே துறைமுகத்தில் இல்லை என்றும், உயிரிழப்புக்குக் காரணம் தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். இருப்பினும் அப்பகுதி பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை. சந்தேகத்துக்கு இடமான விஷவாயு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.