'கிரே' பட்டியல் தொடர்ந்து நீடிக்கிறது பாகிஸ்தான் : கிரே பட்டியலில் இருந்து விலக போராடி வரும் பாக்.?
Feb 18 2020 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததால், 'grey' பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், அதிலிருந்து விடுபட கடுமையாக போராடி வருகிறது. எனினும் அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்த புகாரில் FATF எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைப்பு, பாகிஸ்தானை, 'grey' பட்டியலில் கடந்த 2018ல் சேர்த்தது. இதனால் சர்வதேச நிதியத்திலிருந்து உதவி பெறுவதில் பாகிஸ்தானுக்கு சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டிவிட்டது தொடர்பான புகாரில், தேடப்பட்டு வரும் ஹபிஸ் சயீத்துக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பாகிஸ்தான் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை அடுத்து, கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என அந்நாடு கருதி வருகிறது.
இதனிடையே, தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக FATF விதித்த 27 நிபந்தனைகளில் 14 நிபந்தனைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றி உள்ளதால் அந்நாடு கிரே பட்டியலில் தொடர்வதையே பல நாடுகளும் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாரீசில் நடைபெற்று வரும் FATF கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கருதப்படுகிறது.