இங்கிலாந்தை தாக்கிய டென்னிஸ் புயல் : வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - மீட்பு பணிகள் தீவிரம்
Feb 17 2020 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தை தாக்கிய Dennis புயலால் ஏராளமான நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் எதிரொலியாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Hay-on-Wye நகரத்தில் உள்ள ஆற்றின் கரைகள் உடைந்ததால், பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.