ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்
Feb 17 2020 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கியிருந்த அமெரிக்கர்கள் மீட்பு விமானம் மூலம் இன்று காலை தாயகத்துக்கு புறப்பட்டனர். கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் 400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை சிக்கியிருந்தனர். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அவர்களை மீட்க அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, நேற்று டோக்கியோ சென்ற மீட்பு விமானம், அமெரிக்கர்களை ஏற்றிக் கொண்டு, இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டது. அமெரிக்கா சென்றடைந்ததும் பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.