சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதன் எதிரொலி - ஜெர்மானியர்களைத் திரும்ப அழைக்க முடிவு
Jan 27 2020 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு வசித்துவரும் தம் மக்களை திரும்ப அழைத்துக்கொள்ள ஜெர்மனி முடிவெடுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் Heiko Maas, சீனாவில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவ அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவசரமில்லாத வேறு காரணங்களுக்காக ஜெர்மானியர்கள் யாரும் சீனாவுக்குப் பயணம் செய்யவேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.