ஈரான் நாட்டு விமானம் தரையிறங்கிய போது விபத்து - ஓடுபாதையை விட்டு விலகி, தரையில் மோதிய விமானம்
Jan 27 2020 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரானில் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தரையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஸ்பியன் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று டெஹ்ரான் நகரிலிருந்து மாஷ்ஷர் நகருக்குச் சென்றது. விமான நிலையத்தில் இறங்க முற்பட்ட போது எதிர்பாரதவிதமாக ஓடுபாதையை விட்டு விலகி தரையில் மோதியது. இதில் விமானத்தின் கீழ் பாகத்தில் இலேசான உடைப்பு ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக அனைத்து பயணிகளும் அவசரகால வழி மற்றும் வழக்கமாக வெளியேறும் வழியாக பீதியுடன் வந்ததைக் காணமுடிந்தது. இந்த விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.