வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் : நோய் பரவல் தடுப்புக்காக ரூ.11 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
Jan 27 2020 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீன அரசு மேலும் 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்கனவே ஆயிரத்து நூறு கோடி ரூபாய் நிதியை சீன அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை மருந்துகள் உற்பத்தி செய்வதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் செலவினங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்குமாறும், பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் அரசின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என்றும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.