அரசவைப் பதவிகளை துறந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல்: பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
Jan 20 2020 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்கலும் தங்களது அரசவைப் பதவிகளை துறந்துவிட்டதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகிச் செல்ல விரும்புவதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி அண்மையில் அறிவித்தார். அவரது முடிவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, லண்டனில் நேற்று இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்கலும் அரசவைப் பதவிகளை துறப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இருவரும் இளவரசர், இளவரசி பட்டங்களை துறந்துவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசவை சேவைக்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அரசுநிதி இனி வழங்கப்படாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.