அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரிப்பு : அணு ஆயுத தயாரிப்பில் மீண்டும் தீவிரம் காட்டும் ஈரான்
Jan 17 2020 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவுடனான மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது அணுஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை, அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றதற்கு பதிலடியாக, அந்நாட்டு ராணுவ முகாம்கள் மீது, ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ''அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளில் அதிகளவில் ஈடுபடப் போவதாகவும், அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் தங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் ஈரான் அதிபர் ரவுஹானி தெரிவித்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பை ஈரான் நிறுத்தி வைத்திருந்த நிலையில், அந்த முடிவை கைவிட்டு மீண்டும் அணு ஆயுத தயாரிப்பில் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது.