தென்னாப்பிரிக்கா நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் ஆர்வம் காட்டும் தன்னார்வ நிறுவனம் : கட்டுமானத்துறைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு
Jan 16 2020 9:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்கா நாட்டில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நோக்கில் கட்டுமானத்துறைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தென்னாப்ரிக்கா நாட்டின் தலைநகர் கேப்டவுனில் உள்ள தன்னார்வ நிறுவனம் ஒன்று, பிளாஸ்டிக் பொருட்களை அழிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. வேஸ்ட்-ஈடி என்ற இந்த அமைப்பு, பொது இடங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, அதில் பிளாஸ்டிக் குப்பைகளை நிரப்புகிறது. பின்னர், மரப்பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டம் போன்ற அமைப்பிற்குள் களிமண்ணை வைத்து, அதனிடையே பாட்டில்களை அடுக்கி, வெவ்வேறு அளவுகளில் சுவர்களை வடிவமைக்கின்றனர். இச்சுவர்கள் கட்டுமானப்பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.