அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் - செனட் சபையில், வரும், 21-ம் தேதி விவாதம் தொடக்கம்
Jan 15 2020 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீது, செனட் சபையில், வரும், 21-ம் தேதி விவாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள பிரதிநிதிகள் சபையில், இந்தத் தீர்மானம் சமீபத்தில் நிறைவேறியது. அடுத்ததாக, செனட் சபையில் இந்த தீர்மானம் குறித்து விவாதித்து, ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இந்தத் தீர்மானம், செனட் சபையில் நிறைவேறுவது கடினம் என்று கூறப்படுகிறது. இந்த தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் இருந்து இதுவரை அனுப்பப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்தத் தீர்மானம், செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் வரும், 21ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.