பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்
Jan 14 2020 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 24 மணிநேரத்தில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காணாமல் போன ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுவரும் நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தில் பலத்த மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துவிட்டதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.