வளைகுடா பிராந்தியத்தில் அமைதி நிலவ சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் உதவ வேண்டும் - ஜப்பான் வேண்டுகோள்
Jan 14 2020 7:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வளைகுடா பிராந்தியத்தில் அமைதி நிலவ சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் உதவ வேண்டும் என ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இப்பயணத்தின் போது அவர் பேச்சு நடத்தி வருகிறார். இந்நிலையில், சவுதி அரேபிய பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீகரத்திற்கு வந்துள்ள அபேவை அபுதாபியில் இளவரசர் முகமது பின் சயீது வரவேற்றார். வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என ஜப்பான் பிரதமர் அபே, மத்திய கிழக்கு பிராந்தியத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அடுத்ததாக ஓமன் நாட்டிற்குச் சென்று, மறைந்த அந்நாட்டின் மன்னருக்கு அஞ்சலி செலுத்த, அபே திட்டமிட்டுள்ளார்.