மணிலாவில் வெடித்துச் சிதறியது எரிமலை - ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
Jan 14 2020 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள Taal எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட கரும்புகை பல மீட்டர் தூரத்துக்கு வானுயர எழுந்தது. அந்நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான Taal எரிமலை, தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக எரிமலையைச் சுற்றியுள்ள 8 ஆயிரம் கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த எரிமலை ஏரிக்கு நடுவே உள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக, மணிலா விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. 170 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.