டென்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற சிறிய கடற்கன்னி சிலையின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் நாசவேலை
Jan 13 2020 7:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டென்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற சிறிய கடற்கன்னி சிலையின் கீழ் அடையாளம் தெரியாத சிலர், 'ஹாங்காங்கை விடுதலை செய்' என எழுதிவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் புகழ்பெற்ற சிறிய கடற்கன்னி சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்குச் சுமார் பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் இச்சிலையைக் கண்டுகளிக்கின்றனர். இந்நிலையில், இன்று காலையில், அந்தச் சிலையின் பீடத்தில் 'ஹாங்காங்கை விடுதலை செய்' என யாரோ சிலர் சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதிவிட்டுச் சென்றுவிட்டனர். இப்பகுதிக்கு சீன சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் நிலையில், இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.