ஆஸ்திரேலியாவில் பாறையில் இருந்து தவறி கடலில் விழுந்த உயிரிழந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண்
Jan 13 2020 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் பாறையில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் கடலுக்கு மிக அருகில் உயர்ந்த பாறைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இப்பகுதியில் பாதுகாப்பு விதிகளை மீறி பாறைமீது ஏறி நின்ற போது கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.