ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்
Jan 13 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகள் கங்காரு தீவில் தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் நியூ சவுத்வேல்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயில் சிக்கி கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்துள்ளன. எனவே உடல்களை அப்படியே விட்டுவிட்டால் மிகப்பெரிய சுகாதாரக்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்தி அழிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கங்காரு தீவில் உள்ள காடுகளில் இப்பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன.