உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் பலியான மலேசிய விமான பயணிகளின் உடல்கள் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன - ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி
Jul 24 2014 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் பலியான மலேசிய விமான பயணிகளின் உடல்கள் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் வெடித்துச் சிதறிய மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்கள் நெதர்லாந்து கொண்டுவரப்பட்டன. ஹில்வெர்சம் நகருக்கு வந்தடைந்த உடல்கள் அரசு மரியாதையுடன் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டன. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அம்ஸ்டர்டாம் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளை பலூன்களுடன் அமைதிப் பேரணியில் பங்கேற்று, விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, தைவானின் பென்கு தீவில் அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது, விபத்து ஏற்பட்டு, விமானம் தீப்பற்றி நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்த 47 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.