துருக்கி நாட்டில் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக 11 காவல்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை - ஏற்கனவே கைது செய்யப்பட்ட 38 பேர் விடுவிப்பு
Jul 31 2014 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கி நாட்டில் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக 11 காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு ஏற்கனவே கைது செய்யப்பட்ட 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கியில் அந்நாட்டு பிரதமர் தையிப் எர்டோகன் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. முக்கியமாக பிரதமர் தையிப் எர்டோகனின் ஆதரவாளர்கள் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 38 பேரின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள 11 பேரிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதமர் தையிப் எர்டோகன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களில் பல முக்கிய தகவல்கள் உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஓட்டுக் கேட்பு விவகாரத்தை முக்கியமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதேபோல், கைது செய்யப்பட்ட நபர்கள் பலர், விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் கூட, போதிய ஆதாரங்கள் இல்லாததால், கூடிய விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.